பூணூல் அணிவதன் அர்த்தங்கங்கள்
பூணூல் அணிவதன் அர்த்தங்கங்கள் மற்றும் பூணூல் அனைவரும் ஏன் அணியவேண்டும்?. பூணூலில் உள்ள இந்த 3 நூல்கள், ஒருப்ரம்ம முடிச்சும் எதை உணர்த்துகிறது? என்பதை பற்றி நாம் அனைவரும் தெரிந்துகொள்வோம்
பூணூல் ஏன் இடது தோளில் அணிகிறோம்? பூணூல் இடது தோளில் அணிவதை “உபவீதம்” என்று அழைக்கிறோம். தேவர்களுக்கு செய்யும் காரியங்களுக்கு பூணூல் இடது தோளில் (உபவீதமாக) இருக்க வேண்டும். நம் முன்னோர்களுக்கு செய்யும் காரியங்களுக்கு பூணூல் வலது தோளில் இருக்க வேண்டும். நம் ரிஷிகளுக்கு செய்யும் காரியங்களுக்கு பூணூல் மாலையாக இரு தோள்களில் இருக்க வேண்டும். முன்னோர்கள் பித்ரு லோகம் தென்திசையில் உள்ளது. அதுபோல, தேவ லோகம் வட திசையில் உள்ளது. பொதுவாகவே, எந்த வேத சம்பந்தமான பூஜையோ, யாகமோ கிழக்கு திசை பார்த்துதான் செய்ய வேண்டும். ஒருவருக்கு நமஸ்காரம் செய்தால் கூட, பொதுவாக கிழக்கு திசை பார்த்து தான் செய்கிறோம். கிழக்கு திசை பார்த்தே பெரும்பாலும் வேத காரியங்கள், நல்ல காரியங்கள் செய்வதால், நமக்கு இடப் பக்கம் வடக்காக இருப்பதால், பூணூல் இடமாகவே போட்டு கொள்கிறோம். நமக்கு வலப்பக்கம் தெற்குதிசை இருப்பதால், முன்னோர்களுக்கு தர்ப்பணம், திவச காரியங்கள் செய்யும்போது, பூணூல் வலமாக போட்டுகொள்கிறோம். ரிஷிகள் எங்கும் இருப்பதால், இரண்டு தோளும் படுமாறு மாலையாக போட்டு ரிஷி கடனை அடைகிறோம். பூணூல் நாம் அனைவரும் பொதுவாக ஆவணி அவிட்டம் அன்று வேதமறிந்த வேதியரிடம் பக்தியுடன் வாங்கி போட்டு கொள்ளவேண்டும். இது ஒரு கவசம் ஜாதி பேதம் இல்லாமல் அணியலாம். வேதமறிந்த வேதியரிடம் பக்தியுடன் வாங்கி போட்டு கொள்ள வேண்டும் ப்ராம்மணர்கள் மட்டுமின்றி, பாரத தேசத்தில் அனைவரும் பூணூல் அணிந்து இருந்தனர்.. “க்ஷத்ரிய அரசர்கள், வியாபாரிகள், சுய தொழில் செய்பவர்கள்” என்று அனைவ பூணூல் அணிந்து இருந்தனர்.நம் தெய்வங்களும் பூணூல் அணிந்து இருப்பதை பார்க்கிறோம். நாம், இதுபோன்ற பழக்கத்தின் “ரகசியங்களையும்” தொலைத்தோம் ‘பூணூல் எதற்காக அணிந்தோம்?’ என்ற காரணம் இன்று மறைந்து போனதால், ‘எதற்கு பூணூல் அணிய வேண்டும்?’ என்று பாரத மண்ணில் பிறந்த நாமே நம்மை கேட்டுகொள்கிறோம். பூணூல் அணிவதன் உள் அர்த்தங்கங்கள் பற்றி நாம் அனைவரும் தெரிந்துகொள்வோம்
பூணூல்’ மூன்று நூல்களை’ கொண்டதாக இருக்கிறது. பூணூலில் ஒரு’ முடிச்சும்’ காணப்படுகிறது. அதை “ப்ரம்ம முடிச்சு” என்று சொல்லி கேள்விபட்டு இருப்போம்.. மூன்று நூல்கள் எதை உணர்த்துகிறது? “மனிதனாக பிறந்த நாம் அனைவருமே, “மூன்று பேருக்கு கடன்பட்டு” இருக்கிறோம்” என்பதை பூணூலில் உள்ள இந்த 3 நூல்கள் உணர்த்துகிறது…
ஒன்று பித்ரு கடன்,
இரண்டு, ரிஷி கடன்,
மூன்றாவது, தேவ கடன். .
பித்ருகடன்
இன்று வரை மோக்ஷம் அடையாத கோடிக்கணக்கான ஜீவாத்மாவில், நாமும் இருக்கிறோம். இன்று வரை மோக்ஷம் அடையாததாலேயே நாம் உலகத்தில் இன்று வரைபிறந்து இருக்கிறோம். ஜீவனான நமக்கு, “மனித உடல் கொடுத்து” இந்த உலகில் வாழ வழி செய்தவர்கள்” நம்பெற்றோர்கள்”. நமக்கு கொடுக்கப்பட்ட இந்த உடலை வைத்துகொண்டு, நாராயணனிடம் பக்தி செய்து மோக்ஷம் அடைந்து விட முடியும்.. இந்த உடலை வைத்து கொண்டு, உலக விஷயங்களில் ஈடுபடவும் முடியும்.. “உடலை கொடுத்த நம் பெற்றோர்களுக்கு, நாம் நன்றி செய்ய கடன்பட்டுள்ளோம்”. இதை நமக்கு எப்பொழுதும் “நினைவுபடுத்தவே”, பூணூல் அணிகிறோம். பூணூலில் உள்ள ஒரு நூல் “பித்ரு கடன் உனக்கு உள்ளது” என்று நம்மை நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறது. தாய், தந்தை, பாட்டி, தாத்தா, பாட்டனார்கள் அனைவருக்கும் இந்த உடல் கடன் பட்டுள்ளது. அவர்கள் உயிருடன் இருக்கும் வரை, அவர்களை அனாதையாக விட்டு விடாமல், அவர்களுக்கு சேவை செய்து இந்த கடனுக்கு பதில் செய்ய வேண்டும். அவர்கள் உயிர் பிரிந்து “பித்ரு லோகம்” சென்றாலும், அவர்கள் வேறு பிறவியே எடுத்தாலும், அவர்கள் எங்கு இருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும் என்று பித்ரு தேவதைகளிடம் வேண்டி, அவர்கள் உயிர் பிரிந்த நாட்களில் திதி (திவசம்/சிரார்த்தம்) செய்து பித்ரு கடனை அடைக்க வேண்டும். “திவசம்” போன்ற காரியங்கள் செய்யும்போது, ஹிந்துக்கள் அனைவருமே பூணூல் அணிந்து கொள்கிறார்கள். காரணம் புரியாததால்!! பெற்றோருக்கு திதி கொடுத்த பிறகு, பூணூலை கழட்டி எறிந்து விடுகிறார்கள்… அமாவாசை தர்ப்பணம், திதி கொடுப்பதும், பெற்றோருக்கு நாம் செய்யும் நன்றி கடனே, நன்றி உணர்ச்சியே.. இது நம்முடைய ஒரு கடமையே. “உனக்கு மனித உடல் கொடுத்த பெற்றோருக்கு நன்றி செய்ய என்றுமே மறந்துவிட கூடாது ” என்று நம்மை நினைவு படுத்துவதற்கே நமக்கு பூணூல் அணிவிக்கப்பட்டது. தாய் தந்தையை தெய்வமாக மதிப்பவன், அவர்கள் மனம் கோணாமல் வாழ ஆசைப்படுபவன், அவர்களுக்கு நன்றியுடன் வாழ ஆசைப்படுபவன், இந்த உயர்ந்த நோக்கத்தை நமக்கு நினைவுபடுத்தும் பூணூலை அவமதிக்க கூடாது .
தேவ கடன்
சூரிய தேவன், “கண்” என்ற உறுப்பிற்கு “பார்க்கும்” சக்தியை கொடுக்கிறார். அக்னிதேவன், மனித உடலுக்கு ஏற்ற சூட்டை கொடுத்து, உறுப்புகளை வேலை செய்ய உதவுகிறார். வாயுதேவன், 5 வாயுவாக உடல் முழுவதும் இருந்து, உடல் உறுப்புகள் அசைந்து வேலை செய்ய உதவுகிறார். இப்படி முப்பத்து முக்கோடி தேவர்களும், நம் உடலை இயங்க செய்ய உதவுவதால், உடலை அழுகிவிடாமல் காக்கும் தேவர்களுக்கும் நாம் “கடன்” பட்டு இருக்கிறோம். ஸந்தியா வந்தனத்தில், “பிரணவ ஜபம், காயத்ரிஜபம்” தவிர, மற்றவவைகள் மந்திரங்கள் அல்ல ஸ்தோத்திரங்களாகவே இருக்கின்றன. ஆரம்பம் முதல் கடைசி வரை, பல தேவதைகளின் பெயரை சொல்லி துதிப்பதாக வேசந்தியாவந்தனம் உள்ளது.. தேவதைகளின் ஸ்தோத்திரங்களாகவே இருக்கின்றன. தினமும் மூன்று வேளை சந்தியாவந்தனம் செய்வதன் மூலமாகவே “தேவ கடனுக்கு” நாம் நன்றி செய்ய முடிகிறது. சந்தியாவந்தனத்தில், நவ க்ரஹங்களை திருப்தி செய்கிறோம்.. எமனுக்கு கூட வந்தனம் செய்கிறோம்.. “யோவ: சிவதமோரஸ:” என்று சிவபெருமானை தியானித்து கொண்டே நம்மை சுத்தி செய்து கொள்கிறோம்… “சர்வாப்யோ தேவதாப்யோ நமோநம:” என்று அனைத்து தேவதைகளுக்கும் சேர்த்து நமஸ்காரம் செய்கிறோம்… சந்தியாவந்தனம் ஒழுங்காக செய்தாலே, நாம் “தேவ கடனை ” அடைத்து விடலாம். “சிவாய நம, நமோ நாராயணா, முருகா போற்றி” என்று சொல்வதும், ஆழ்வார்களின் திவ்ய பிரபந்தங்கள், நாயன்மார் பதிகங்கள் போன்றவை பா, நாம் செய்யும் ஸ்தோத்திரங்களே செய்து “தேவ கடனை” அடைக்கிறோம். அது தவிர ,தினமும் பூஜை அறையில் உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் நன்றியுடன் பூஜை செய்வது மூலமாகவும், குல தெய்வத்தை மறந்து விடாமல் வழிபடுவதின் மூலமாகவும், கோவில் திருப்பணிகளில் உடல் ரீதியாகவும், பொருள் ரீதியாகவும் முடிந்த உதவி செய்வதாலும், “தேவ கடனை” அடைக்கிறோம்.
ரிஷிகடன்
“ஓம்” என்ற மந்திரத்தை முதலில் க்ரஹித்து உலகுக்கு வெளிப்படுத்திய வர்ப்ரம்ம தேவன். “ப்ரணவஸ்ய ரிஷி ப்ரம்மா” என்று சந்தியாவந்தனம் காட்டுகிறது. ப்ரம்மாவே ரிஷிதான். “ஓம் என்ற பிரணவம்” ஸித்தி ஆகும் போது, நம்மை படைத்த ஈஸ்வரன் நம்மை காப்பாற்றுகிறார் என்ற தெளிவான அறிவு ஏற்பட்டு விடும். உலகமே எதிர்த்தாலும், கலங்காத உள்ளம் ஏற்பட்டு விடும். “காயத்ரி மந்திரத்துக்கு” ரிஷி விஸ்வாமித்திரர். இப்படி வேத மந்திரங்களுக்கு ரிஷிகள் பலர்..சக்தி வாய்ந்த வேத மந்திரங்களை நமக்கு கொடுத்த ரிஷிகள், நமக்கு “ஆயுர் வேதம், யோகா, சித்த மருத்துவம்” என்றுபல சாஸ்திரங்களையும் அள்ளி கொடுத்தனர்.. அவர்கள் எங்கெல்லாம் “சிவ பெருமானையும், பெருமாளையும், முருகனையும், விநாயகரையும், அம்பாளையும், தேவதைகளையும்” பூலோகத்தில் தன் பக்தியால் தரிசித்தார்களோ, அங்கெல்லாம் அந்த தெய்வங்கள் சாநித்யத்துடன் என்றுமே இருக்க செய்து, நமக்கு தெய்வங்கள் அருள் செய்ய, கோவில் அமைய காரணமாக அமைந்தனர். வாழ்க்கைக்கு வழிகாட்ட, ராமாயணம், மஹாபாரதம்போன்ற இதிஹாசங்களை நமக்கு கொடுத்தனர்..மோக்ஷத்துக்கு வழிகாட்ட வராஹ புராணம், பாகவதம் போன்றவைகளையும் கொடுத்தனர்.. நாம் அனைவருமே ப்ரம்ம தேவன் என்ற ரிஷியால் படைக்கப்பட்டவர்கள் தான்.. ரிஷிகளின் பரம்பரையில் வந்தவர்கள் நாம் அனைவருமே ரிஷிகள் விஞ்ஞானிகளுக்கும் மேலானவர்கள்.. இதே சமயம் அடுத்த வருடம் எத்தனை மணிக்கு சூரியன் உதயமாகும்? சந்திர க்ரஹனம் எப்போது ஏற்படும்? என்று இவர்கள் சொல்லி கொடுத்த முறையை கொண்டு, இன்று கூட ஒரு வருட கால நிலையை பஞ்சாங்கம் என்று எழுதி விடுகின்றனர்.. பூணூலில் உள்ள மூன்றாவது நூல் “ரிஷிகடன் உனக்கு உள்ளது” என்று நம்மை நினைவு படுத்திக்கொண்டே இருக்கிறது. சந்தியாவந்தனத்தில் பிராணாயாம ஜபம் செய்து, ஓங்காரத்திற்கு ரிஷியான ப்ரம்ம தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம். காயத்ரிஜபம் செய்து, விஸ்வாமித்ர ரிஷியின் அணுகிரஹத்தை பெறுகிறோம். வால்மீகி, வியாசர் போன்ற ரிஷிகள் நமக்கு அளித்த “புராணங்கள், ராமாயணம், பாகவதம், பாரதம்” போன்றவைகளை கொஞ்சம் படித்தாலும், நம்மை பார்த்து ரிஷிகள் சந்தோஷப்படுகின்றனர். மூன்று வேளையும், ஸந்தியாவந்தனம் செய்துவந்தாலே “தேவ கடனும் தீருகிறது, ரிஷிகடனும் தீருகிறது “.ரிஷிகளுக்கு நிகரான ஞானிகள், மகாத்மாக்கள், சந்நியாசிகளை கண்டால், அவர்களுக்கு முடிந்த சேவைகள் செய்து ரிஷிகடனை அடைக்கலாம். குருவிடம் உபதேசமாக மந்திர உபதேசங்கள் பெற்றுக்கொண்டு ஜெபிக்கும்போது, ரிஷிகடன் தீருகிறது. அவர்கள் மடங்களில் சுத்தம் செய்வது, அன்னதானம் செய்வது, போன்ற சேவைகள் செய்யலாம். மகான்களின் அறிவுரைபடி வாழ முயற்சிப்பது. ரிஷிகள் நமக்கு கொடுத்த புராணங்களை படித்து உணர்வது, ரிஷிகள் வழிபட்ட தெய்வங்களுக்கு சேவை செய்வது போன்றவை மூலம் “ரிஷிகளின் கடனை” நாம் அடைக்கிறோம்.. இந்த “மூன்று கடனையும்” எந்த காரணம் கொண்டும் நாம் மறந்து விட கூடாது, என்பதற்காக, பூணூல் அனைவருக்குமே அணிவிக்கப்பட்டது.. இன்று ப்ராம்மணன் மட்டும் அணிவது வேதனைக்குரியது.. அனைவருமே அணிய வேண்டும். “ஓம் நம சிவாய” என்று நாம் செய்யும் ஸ்துதி சீக்கிரம் பலித்து, சிவ பெருமான் பிரசன்னமாக, வேதம் கற்ற ப்ராம்மணர்கள் கையால் “ஆவணி அவிட்டம்” என்ற நாளில் பூணூல் வாங்கி போட்டு கொள்ளவேண்டும். அனைவரும் பூணூல் வாங்கி அணிய வேண்டும்.. நம் பிரார்த்தனைகள் பலிக்க, நாம் செய்யும் மந்திர ஜபங்கள் சீக்கிரம் பலிக்க,
நினைத்த காரியங்கள் நிறைவேற, வேதம் கற்ற ப்ராம்மணர்கள் கையால் “ஆவணிஅவிட்டம்” என்ற நாளில், பூணூல் வாங்கி போட்டு கொள்ளவேண்டும் .யாதவ குலத்தில்அவதரித்த கிருஷ்ணரும் சந்தியாவந்தனம் செய்தார். பூணூல் அணிந்து இருந்தாரே!! ஆசாரியும், பொற்கொல்லனும், வியாபாரியும் பூணூல் அணிந்து இருந்தனரே!!.. நாம் அனைவருமே நம் “பெற்றோருக்கு” கடன்பட்டு இருக்கிறோம்.. ப்ரம்ம தேவன் வழிவந்த நாம் அனைவரும், “ரிஷிகளுக்கு’ கடன்பட்டு இருக்கிறோம். நம் உடல் ஒழுங்காக வேலை செய்வதும், உலகில் மழை பெய்வதும், காற்று மெல்ல வீசுவதும் தேவர்களால் என்பதால், நாம் அனைவரும் “தேவர்களுக்கு” கடன்பட்டு இருக்கிறோம்.. ஆதலால் பூணூல் அனைவரும் அணிந்து இருக்க வேண்டும்.. நாம் செய்யும் தெய்வ பிரார்த்தனைகள் பலிக்கவாவது, அனைவரும் பூணூல் அணிந்து இருக்க வேண்டும்.. மனிதனாக பிறந்த யாருமே “இந்த மூன்று கடனை அடைக்காமல் வாழ்ந்தால்” பாவத்தை சேர்த்து கொள்கிறான்.. இந்த “மூன்று கடன் நம் தலையில் இருப்பதை உணர்த்தவே” பூணூல் அணிகிறோம்.. இது வெறும் நூலாக தான் தோன்றும்.. பாரத மக்கள் விழிப்படைய வேண்டும். எதையும் ஆராய்ச்சி இல்லாமல் நம் முன்னோர்கள் செய்யவில்லை என்று புரிந்து கொள்ளவேண்டும்.. பெரும்பாலான ஹிந்துக்கள் மகான்களிடம் பக்தி, தெய்வ பக்தி, பித்ருபக்தி கொண்டவர்களாக இருப்பதால், அனைவருக்கும் பூணூல் அணிவிக்கப்பட்டது ரிஷிகடனும் இல்லாத, தேவ கடனும் இல்லாத, பித்ருகடனும் இல்லாத வாசுதேவன் நாராயணன், “நாம் அணிந்தால் அவர்களும் அணிவார்கள்” என்று தானும் பூணூல் போட்டு கொள்கிறார்.
பெற்றவனுக்கு நன்றி காட்ட நினைக்கும் அனைவரும்,
தேவதைகளுக்கு நன்றி காட்ட நினைக்கும் அனைவரும்,
ரிஷிகளுக்கு நன்றி காட்ட நினைக்கும் அனைவரும்,
கட்டாயம் பூணூல் அணிந்து கொள்ள வேண்டும்.