கொங்கு குலாலர் திருமணச் சடங்கு
கொங்கு குலாலர் திருமணச் சடங்கு
ஆதாரம் குலாலர் திருமணத் திரட்டு 1933-ல் வெளியிடப்பட்டது.
ஏழு நாள் கபாணத்திற்கு ஏற்பட்ட சீர்கள் 32,
நிச்சய தாம்பூலம் :
பெண் வீட்டாரும், மாப்பிள்ளை ஏகோபித்துக்கொண்டபின் உறவின் முறையார்களைக் கூட்டி வைத்து அவர்களிடம் திருமண விஷயங்களைத் தெரிவித்து முகூர்த்த நாள் குறித்து பந்துக்களுக்குத் திருமணப் பத்திரிகை யனுப்புவதோடு எல்லோருக்கும் தாம்பூலம் வழங்குதல்.
முகூர்த்த நெல் வேகவைத்தல் :
குலதேவதைகளுக்குக் குடிக்காணிக்கை யெடுத்து வைத்துவிட்டு, சுபமங்கள, ஸ்திரீகளால் நெல்லைப் பாத்திரத்திலிட்டு வேகவைத்தல், மணவறைப்பந்தல் அலங்கரித்தல், வந்துள்ள ஸ்திரீகளுக்குத் தாம்பூலம் வழங்கல்.
பந்துக்களை வரவேற்றல் :
முகூர்த்த நாளன்று வரும் பந்துக்களை ஜாதியாசாரப்படி வரவேற்று எல்லோரையும் உட்காரவைத்துக் கலியாணத்தைப் பூர்த்தி செய்துகொடுக்கப் பொருப்பாகச் சிவலாடைக்காரி யென்றும், சீர்க்காரியென்றும் ஏற்படுத்தி அவர்களுக்குத் தாம்பூலம் கொடுத்துக்கலியாணவீட்டில் நந்தாதீபம் ஏற்றும் படி செய்தல், பின்பு விஜயம் செய்துள்ள உறவின் முறையார்களில் எத்தனை நாட்டார்களென்று கணக்கிட்டு அவர்களுக்கும், நாடு, பட்டம், செட்டுமைகளுக்கும் முறைப்படி தாம்பூலம் வழங்குதல்.
மூகூர்த்தக்கால் நாட்டல் :
மஞ்சள் துணியில் நவதானியங்களை முடிந்து மாவிலை, குசைப்புல்லும், சேர்ந்து முகூர்த்தக்காலுக்குக்கட்டி, அக்காலுக்கு பெரியோர்களால் பூஜைசெய்து ஈசானியபாகத்தில் நாட்டுதல், பின்பு பந்தக்கால்களுக்குச் கண்ணாம்பும், காவியும் கரைகட்டி, வண்ணாணைக் கொண்டு மேற்கட்டி கட்டிக்கலியாணப் பந்தலை அலங்கரித்தல்.
கேசாந்தம் :
வாத்தியார் முதலிய பெரியோர்களுக்கு வஸ்திரதானம் செய்து மாப்பிள்ளைக்கு மைத்துனர்மார்களைத் தோழன்மார்களாக நியமித்துத் தீக்ஷாமயிர் களைதல்,
நெய் தேய்த்தல்:
முன்னமே நியமிக்கப்பெற்றுள்ள சீர்க்கார ஸ்திரீகளால் கலியாண் மாப்பிள்ளைக்கு நற்நெய் தேய்த்து மங்கள ஸ்தானம் செய்தல்,
ரக்ஷாபந்தனம் :
கலியாண மனைக்குள்ளாக மாப்பிள்ளையையிருத்தி. வெள்ளைநூலில், வெற்றிலையை முடிந்து விநாயகர், பூஜைசெய்து வெண்காப்புக் காட்டுதல்.
ஆயிரப் பெருந்தாலி :
சீர்க்காரிகளால், மங்களாகரத்துடன் சென்று பூமிதேவிக்குப் பூஜைசெய்து மண்ணையெடுத்துவந்து மணவரைத் திண்ணையில் வேதிகை நிர்மித்து ஆயிரப் பெருந்தாலியென்ற நந்தா, தீபத்தை ஏற்றிவைத்தல்.
யக்னோப் வீத்தாரணம் :
மாப்பிள்ளைக்கு மஞ்சலுடைதரித்து வேதிகையிலிருக்கச் செய்து கலசபூஜை விநாயகர் பூஜை முதலிய தேவதாபூஜைகள் செய்து, அதற்குவேண்டிய மந்திரங்களை ஜெபித்து, ஓமம், வளர்த்து, முளைப்பாலிகையிட்டு, மூல மந்திரங்களைச் சொல்லி, பஞ்சகவ்வியம் நிர்மித்து மாப்பிள்ளைக்குக் கொடுத்துக் காப்புக்கட்டி எல்லோருக்கும். தாம்பூலம் கொடுத்துப் பூநூல் கலியாணம் செய்தல்.
அருகுமணம் :
பெரியோர்கள், சுபமங்கள ஸ்திரீகளால் அருகுமணஞ் செய்து ஆலாத்தியேந்தி வித்வான்களால் மங்களம், சோபனம் முதலிய வாழ்த்துக்கூறி நாந்திகமென்னும் அருகுமணஞ் செய்தல்.
நந்திவிடுதல் :
ரதகஜ துரகபதாதி நந்தி முதலிய சேனைகள் செய்து இஷ்டகுல தேவதையான அய்யனார் சன்னதியில் வைத்து அரிகர புத்திரருக்கு அபிஷேகம் செய்து இனி நான் அனுஷ்டிக்கும் பிரிம்மச்சாரிய விரதத்தைக் காத்து ரக்ஷிக்கும்படி வேண்டிக்கொண்டு வருதல்.
காசி யாத்திரை :
முன்னமே பூண்ட பிரம்மச்சாரிய விரத நியமத்தை நீக்கி இல்லறத்தை வெறுத்துச் சன்னியாசி விரதம்பூண்டு சுற்றத்தாரிடம் பிச்சை வாங்கிக் காசி யாத்திரைக்குச் சென்ற அணிந்திருந்த சன்னியாசி உடைகளைமாற்றிக் காசியாத்திரைக்கு முயன்ற காலுக்குப் பாதபூஜை செய்து, தமக்கை, தங்கைமார்களால் மிஞ்சி போடும்படிசெய்து, எங்கள் பெண்ணை உமக்கே தருவோமென்று வாக்களித்தபின் அழைத்துவந்து எச்சல் கலக்கும்படி தண்டுவப் பூதக்கல விருந்திட்டு மாப்பிள்ளையை விடுதிவீட்டில் இருக்கச் செய்தல்.
மணப்பெண் அரங்கம் வருதல் :
மணப்பெண்ணுக்கு மங்களஸ்நானம், செய்துவைத்து, வெண் காப்புக்கட்டி, அருகுமணமெடுத்து மாமிமார்கள் பெண் காணுவதும், சொர்ண சீப்புகளினாலே மாமிமார்கள் குலங்கோதுவதும், தாய்மாமன், பெண்ணுக்கு மாலையிடுவது முதலிய சீர்களை நடத்தியபின் பெண் வாத்திய கோஷத்தோடு மணவரையில் வந்தமர்தல்.
விநாயகர் பூஜை :
மாப்பிள்ளை ஆணை, குதிரை, முதலிய வாகனாதிகளில் ஏறிச்சென்று விநாயகரைத் தோத்தரித்து சிதர்தேங்காயெரிந்துவிட்டுக் கலியாண அரங்கத்திற்கு வருதல்.
ஓமம் வளர்த்தல் :
வேதிகைமீது தண்டுலம், பரப்பிப்பூர்ண கும்பம் ஸ்தாபித்து விநாயகர் பூஜை, கலசபூஜை, ஆஸ்மணம் அங்கர் நியாஸனம், சங்கர்ப்பம், சூரிய அற்கியம் தேவதர்ப்பணம், ரிஷிதர்ப்பணம், பிதுர் தர்ப்பணம், ஒமம் நவக்கிரஹ பூஜை, திக்குபாலகர் பூஜை, பஞ்சகவ்வியம், ரக்ஷாபந்தனம், முளைப்பாலி, உபவீதம் முதலியவைகளுக்குச் சொல்லவேண்டிய மந்திரங்களைப் புரோகிதர், வாத்தியார் இவர்களால் உச்சரித்து வேதவிதிப்படி பிராயச்சித்த பஞ்சாக்கினி. ஓமம், வளர்த்தல்.
திருப்பூட்டுதல் :
ஓமகுண்டத்தின் முன்பாக மாப்பிள்ளையின் பிதாவும், பெண்ணின் பிதாவும் ஒருவருக்கொருவர், ஆசீர்வதித்துக் கோத்திரங் கூறித் தாரை வார்த்தல் பின்பு, மாப்பிள்ளையும், பெண்ணும் தாய் தந்தையருக்குப் பாதபூஜை செய்து, பெரியோர்கள், ஆசிர்வாதத்தோடு மாங்கல்யத்தை வேதவிதிப்படி சூட்டுதல்.
தம்பதிகளின் ஆசிர்வாதம்:
பெரியோர்களால் அக்ஷதை அரிசியிட்டு அருகுமணம் செய்து மங்கள வாழ்த்துக் கூறியபின் மணமக்களின் கைகளைக் கோர்த்துக்கட்டி வேதிகையைப் பிரதஷவம் வந்து சபையோர்களிடம் ஆசீர்வாதம் பெறுதல்.
பால்போஜனம் :
தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுப்பிரியாமலும், இல்லறம் வழுவாமல் சரிவர நடத்தி வரவேண்டுமென்றும் ஆசிகூறி பாலும், சாதமும் அருந்தும்படி செய்தல்.
பூதக்கல விருந்து :
மாப்பிள்ளையின் கோத்திரத்தாரும். பெண்ணின் கோத்திரத்தாரும் ஒரே பந்தியிலிருந்து போஜனமருந்துதல்,
பகல் மணச்சீர்:
மாப்பிள்ளையையும், பென்ணையும் மணவரையில் உட்காரவைத்துப் பூர்ணகும்பம் ஸ்தாபித்துப் பூஜித்து, சாந்தரைக்கும் பாடல்பாடி சாந்தரைத்து ஒருவருக்கொருவர் சாந்து பூகதல், தேங்காயுருட்டுதல், பூச்செண்டறிதல், பல்லாங்குழி, விளையாடுதல், புஷ்பம்சூடுதல், முதலிய பலவித விளையாட்டுகளால் மணமக்களைக் குதூகலிக்கச் செய்தல்,
நாகவல்லி :
மாப்பிள்ளையையும், பெண்ணையும் மாலறையிலிருக்கச் செய்து புரோகிதர், வாத்தியார் இவர்களால் விதிப்படி பூஜைகள் செய்ய மாப்பிள்ளையும், பெண்ணும் அம்மி மிதித்து, அருந்ததிகண்டு ஆளந்திருத்தல், ஒத்து வாழ்வதற்கு உதாரணமாகப் பெண்அருந்ததி கண்டேனென்று உறுதிமொழி கூறல்.
கர்ப்ப கிரியை :
மாப்பிள்ளையும் தோழனாகிய மைத்துளரும் ஒருவருக்கொருவர் சந்தன தாம்பூலம் கொடுத்துக் கைகோர்த்து ஓமகுண்டத்தில் நெல்பொரி சொரிந்து நமஸ்கரித்துப் பிரிந்து பெண்ணையும் மாப்பிள்ளையையும், பள்ளியறை சேர்த்து ஊஞ்சல் பாட்டுப்பாடி ஊஞ்சலாட்டுதல்.
சிக உற்பத்தி :
பெண்னுக்குப் கர்ப்ப உற்பத்தியாகிக் குழந்தை பிரசவிக்கிறதும், அக்குழந்தையைத் தொட்டிலிட்டுத் தாலாட்டுப் பாடல்பாடி நித்திரை செய்விப்பதும், பின்பு குழந்தையை எழுப்பி அக் குழந்தையை எல்லோரும் ஆசிர்வதித்துச் சீதனவெகுமதி கொடுத்தல்,
பரியம் செலுத்துதல் :
தாய்மாமன், பெண்ணினுடைய கோத்திரத்தார்கள், மற்றுமுன்ன உறவின் முறையார்கள் முன்னிலையில் பரியம் ரூ. 121/2 அரிசி வள்ளம் 32ம் பருப்பு வள்ளம் 16ம் ஆக இவைகளைப் பெண்வீட்டாருக்கு மாப்பிள்ளை வீட்டார் செலுத்துதல்,
மொய் வைத்தல் :
வேதிகையில் விநாயகர் பாக்கு, அய்யனார் பாக்கு, புரோகிதர் பாக்கு, மடத்துக்குத் தருமப்பாக்கு, பெரியதனப் பாக்கு, இவைகளுக்காகப் பெண்வீட்டார்கள் 30 பாக்கும், மாப்பிள்ளை விட்டார்கள் 30 பாக்குவீதமெண்ணிக் குவியல்கட்டி வைப்பதும், தாய்வீட்டு வரிசை மொய்வைத்து எழுதுவதும். பின்பு சகலரும் மொய்வைத்தெழுதுவதும், மொய் வைத்த குடிப்பிரகாரம் குடியொன்றுக்கு மாப்பிள்ளை வீட்டார்கள்30 பாக்கும். பெண் வீட்டாரும் 30 பாக்குமாகக் கொடுப்பதுந்தவிர, கலியாண மில்லாதவர்களுகெல்லாம் இனமொன்றுக்கு மாப்பிள்ளை வீட்டார், 10 பாக்கும், பெண் வீட்டார் 10 பாக்குவீதங்கொடுப்பதுமாகிய மொய்ப்பாக்கு வழங்குதலும், பெண் வீட்டாருக்கு,
மாப்பிள்ளை வீட்டார். சம்பந்திக்குச் சிறு சீர்ப்பணமென்ற பத்துப்பாம் முடிவதும், பெண் வீட்டார். தன்னுடைய கோத்திரத்தில் பெண்கொண்ட மருமக்கள்மார்களெல்லோரையுங் கலியாண மாப்பிள்ளையும் வேதிகையிலிருக்கச் செய்து மாப்பிள்ளைக்கும் மற்றுமுள்ள மருமக்கள்மார்களுக்கும் சுருள்பணமென்ற கொழுந்திப் பணம் முடிவதுமாகிய சீர்ச்சடங்கைச் செய்தல்.
உரிமைப் பெண் கேட்குதல் :
மாப்பிள்ளையினுடைய, தமக்கை, தங்கைமார்கள் தங்களுக்கு உரிமைப்பெண் தாவேண்டுமென்றும், இன்றையதினமே இது நிட்சய தாம்பூலமென்றும் உறுதி கொண்டு வெங்கலப் பேரிகையடித்துப் பறைசாற்றிவைத்து உறவின் முறையார்களுக்குத் தெரியப்படுத்தி நிட்சயதாம்பூலஞ் செய்து இணைப்பாக்கு வழங்குதல்.
தாய்மாமன் வரிசை:
பெண்ணின் தாய்மாமன்மார்களெல்லோருக்கும், பெண்வீட்டார். விருந்திட்டு, சாலுவை, துப்பட்டி,சோமன்ஜோடி முதலிய வரிசைகள் கொடுத்து வெல்லாம், நெய் சாப்பிடச் செய்து
தாம்பூலங் கொடுத்து உபசரித்தல்.
பாக்கு வரிசை :
முன் வேதிகையில் குவியல் கட்டியிருக்க விநாயகர் பாக்கு, அய்யனார் பாக்கு. புரோகிதர்பாக்கு, மடாதிபதி பாக்கு, பெரியதனப் பாக்கு, குலத்தார்கள் பாக்கு, இவைகளை அவரவர்களுக்கு முறைப்படி வரிசை செலுத்துதல்,
மஞ்சள் நீராடுதல் :
புரோகிதரால் காப்புக் கங்கணம் அவிழ்த்து, மஞ்சள்நீராடித் தண்ணீர்த்துறை மிதித்து முளைபாலிகை விசர்ஜனஞ்செய்து, விநாயகர் தரிசனஞ்செய்து, பழம், தேங்காய், பாக்கு வெத்திலை, மஞ்சள், குங்குமம், புஷ்பம் இனவகளை மடிநிறைந்துவருதல்.
சட்டுவச் சோறு வழங்குதல் :
கலியாண மாப்பிள்ளைக்கும், மாமன், மாமி, கொழுந்தி, நாத்தி முதலாகிய மாப்பிள்ளை வீட்டார்களுக்கும், கலியாணப்பெண் சட்டுவச்சோறு வழங்குதல்,
பட்டணப் பிரவேசம் :
கலியாண மாப்பிள்ளையும், பெண்ணும் குதிரை, யானை, பல்லக்கு இயன்ற தொன்றில் ஏறி மங்கள வாத்தியத்துடன், பட்டணப் பிரதக்ஷணம் வந்து ஆலாத்தி முதலியதுபெடுத்து திஷ்டி சுத்துதல்,
மறுவீடழைத்தல் :
கலியாணப் பெண்ணுக்கு வேண்டிய பலவகைச் சீதனங்கள் கொடுத்து மாமி, மாமனார், வீட்டுக்கு அனுப்பி வைக்கிறதும், பெண்வீட்டார்கள் மறுபடிபோய் பெண்ணையும், மாப்பிள்ளையையும், அழைத்துவந்து உறவின் முறையார்களுக்கும், எண்ணெய் தேய்த்து ஸ்நானஞ் செய்துவைத்து, விருந்துசெய்து, பின்பு மாமி வீட்டுக்குப் பெண்ணையனுப்புதல்.